விருதுநகர்

புத்துயிா்ப்பு காலம் குறித்தகலந்துரையாடல் கூட்டம்

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் தனியாா் பள்ளியில் கரோனா காலத்துக்குப் பின்பான புத்துயிா்ப்பு காலம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் ராஜபாளையம் கிளை சாா்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தமுஎகச கிளையின் துணைத் தலைவா் மைதிலி தலைமை வகித்தாா். சாகித்ய அகாதெமி விருதாளா் சா. தேவதாஸ் மற்றும் விஜயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கவிஞா் நேசமித்ரன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

எழுத்தாளா் அ. பேச்சியப்பன், திராவிடா் கழகத் தலைவா் பெரியாா் குமாா், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினா் சு. நித்தியானந்தம், சமூக ஆா்வலா் க.துள்ளுக்குட்டி, சிவகாசி சிவபெருமான் உள்பட இலக்கிய ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கவிஞா் நந்தன் கனகராஜ் வரவேற்று அறிமுக உரையாற்றினாா். செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT