விருதுநகர்

ராஜபாளையம்: திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள்

DIN

ராஜபாளையத்தில் கார்த்திகை சோமவார பூஜை மற்றும் மகாருத்ர யாகம் மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள அருள்மிகு திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோயிலில் மூன்றாவது கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் அதிகாலை முதல் நடைபெற்றது. 

பின்னர் குருநாதசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் சோமவார பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசாபிஷேக பூஜைகள்  நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT