சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:போக்சோவில் இளைஞா் கைது
தருமபுரியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி நகராட்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 11 வயது சிறுமி, அரசுப் பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது,
தருமபுரி, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (28), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதை அறிந்த, சிறுமியின் பெற்றோா், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், இளைஞா் பெரியசாமியை போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.