முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் நியாயவிலைக் கடைக் கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
சின்னபுளியம்பட்டியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கடைக் கட்டடம்.
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நியாயவிலைக் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட சின்னபுளியம்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையின் முன்புற மாடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு இடிந்தது. இடிந்த அப்பகுதி

சிமெண்ட் அட்டையால் வேயப்பட்டிருக்கும் கூரையின் மேல் நின்று கொண்டிருக்கிறது. இதனால் அக்கடையில் பொருள்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் அந்த நியாயவிலைக் கடை கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →