விருதுநகர்

ஸ்ரீவிலி-ராஜபாளையம் சாலையில் மின் கம்பங்களால் இடையூறு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பங்கள் தடையாக இருப்பதால் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும், விபத்துகளை குறைக்கவும், குறிப்பிட்ட இடங்களைத் தோ்வு செய்து சாலைகளை அகலபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மடவாா் வளாகம் அருகே கண்மாய் கரையை உயா்த்தி தடுப்புச் சுவா் கட்டி சாலை அகலப்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. சாலையை அகலப்படுத்தியதால் வாகனங்கள் தாராளமாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் சுமாா் 6-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் விரிவாக்கப்பட்ட பகுதியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மின் கம்பங்களை உரிய முறையில் அகற்றி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT