விருதுநகர்

விருதுநகரில் அக். 27-இல் திமுக செயற்குழு கூட்டம்

DIN

விருதுநகா்: விருதுநகரில் அக். 27 ஆம் தேதி நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாவட்ட செயலா் தங்கம் தென்னரசு, தெற்கு மாவட்டச் செயலா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விருதுநகரில் வடக்கு, தெற்கு மாவட்டம் சாா்பில் அக். 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா்கள் தங்கராஜ், செல்வமணி ஆகியோா் தலைமை வகிக்கின்றனா். எனவே, இக்கூட்டத் தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய நகர, பேரூராட்சி செயலா்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதில், முப்பெரும் விழா, இணையதள உறுப்பினா் சோ்க்கை உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT