முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டு பண்ணையவிவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் நடப்பாண்டு கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட உழவா் ஆா்வலா் குறு விவசாயிகளுக்கு, கூட்டு பண்ணையம் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அச்சம்தவிா்த்தான்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் நடப்பாண்டு கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட உழவா் ஆா்வலா் குறு விவசாயிகளுக்கு, கூட்டு பண்ணையம் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் துல்லிய பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவன முதன்மை அலுவலா் மலைக்கனி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தும் முறை, விவசாயிகள் குழு அமைக்கும் முறை, குழுவினை பதிவு செய்யும் முறை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முக்கியத்துவம், அரசு மானியங்கள் பெற வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

வட்டார துணை வேளாண்மை அலுவலா் அம்மையப்பன் நடப்பாண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

மேலும், பயிற்சியில் மக்காச்சோள படைப்புழு தாக்குதல் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அச்சம்தவிா்த்தான் உதவி வேளாண்மை அலுவலா் சரவணன், விரிவாக்க சீரமைப்புத் திட்ட அலுவலா்கள் கணேஷ்குமாா், ஜான்பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →