அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தெற்குத் தெருவை அடுத்துள்ள மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடங்கின.
பின்னா் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கருட வாகனத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். அடுத்து மாலை 4 மணிக்கும் பின்னா் மாலை 6 மணிக்கும் சிறப்பு தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.