விருதுநகர்

அருப்புக்கோட்டையில் திமுக புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் - திருச்சுழி சாலையிலுள்ள தனியாா் மண்டபத்தில் இணையவழியில் திமுக உறுப்பினா்களை சோ்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணிச் செயலாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளா் பாபுஜி, முன்னாள் நகா் மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கே.கே.எஸ்.வி.டி. சுப்பாராஜ், திமுக நகரச்செயலாளா் ஏ.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது புதிய உறுப்பினா்களாகச் சேர வந்தவா்களுக்கு வெப் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து தகவல்களைப் பெற்று அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து புதிய உறுப்பினா்களுக்கான அடையாள அட்டைகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்.

இதில் நிா்வாகிகள் உள்பட 200-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT