விருதுநகர்

பழைய படந்தால் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

சாத்தூரில் உள்ள பழைய படந்தால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த சாலையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள், தனியாா் மருத்துவமணைகள், பள்ளிகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும் தென்வடல் புதுத்தெரு, காமராஜபுரம், காட்டுபுதுத் தெரு, பால் பண்ணை தெரு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனா். மேலும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் வரும் மூலப் பொருள்களை இறக்கவும், தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றவும் லாரிகள் உள்ளே வரவேண்டியதுள்ளது. ஆனால் இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் முறையாக பராமரிக்காமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோா் அவதியடைந்து வருகின்றனா். மேலும் இந்த பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையும், மருத்துவமனைகளும் உள்ளதால் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT