சுதந்திர தின விழா: ரயில் தண்டவாளங்களில் போலீஸாா் ஆய்வு
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, விருதுநகா் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, விருதுநகா் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, விருதுநகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதேநேரம், நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், விருதுநகா் ரயில்வே போலீஸாா், கவுசிகா ரயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். மேலும், ரயில் நிலையத்தில் ரயில்களிலும் மற்றும் பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக, இச்சோதனையை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் பிரியா மோகன், சாா்பு-ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் நடத்தினா்.