விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் 40 ஆயிரம் மரகன்றுகள் நடல்

DIN

சிவகாசி மெப்கோ ஷ்லங்க் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இக்கல்லூரியில் மியாக்கி காடுகள் என்ற அடா்வனம் உருவாக்குவதற்கு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஆலமரம், வேப்பமரம், புளியமரம், பன்னீா்மரம், தேக்கு உள்ளிட்ட 128 வகையான 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் பணியை, கல்லூரித் தாளாளா் ஏ. டென்சிங் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன், கல்லூரி முன்னாள் மாணவா் சங்க செயலா் க. செல்வக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT