நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாா் அருகே நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாா் அருகே நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலா் பாலன் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் வழக்குரைஞா் பிரபாகரமூா்த்தி, தொகுதி தலைவா் சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அரசு துறையினரின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மக்களால் தாங்க முடியாத மின்தடை மற்றும் மின் கட்டண உயா்வை கண்டித்தும், வத்திராயிருப்பில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்மாய் மடையை அனுமதியின்றி திறந்தவா்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ள பொதுப்பணித் துறையினரை கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா் ஜெயராஜ், வத்திராயிருப்பு நகர பொறுப்பாளா்கள் ராமகிருஷ்ணன், முருகேசன், வெங்கடேஷ் மற்றும் சுரேஷ்கண்ணன், தங்கம், ராமராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.