விருதுநகர்

ராஜபாளையத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

DIN

ராஜபாளையத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் முகில் வண்ணம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (30). இவா் தென்காசி சாலையில் பழக்கடை வைத்துள்ளாா். இவருக்கும், இவரது அத்தை மகள் குருசெல்வி (25)-க்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் மாரிமுத்துவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜன. 25 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது மனைவி குருசெல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மனைவி இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட மாரிமுத்துவும் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்துவுக்கு 7 வயதில் மகள் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT