அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருநகரில் 10-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றைச் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை 27 ஆவது வாா்டுக்குள்பட்டது திருநகரம். இங்கு சுமாா் 15-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. அவற்றில் சிதம்பரராஜபுரம் உள்ளிட்ட அடுத்தடுத்த பலவீதிகளில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களில் சுமாா் 10-க்கும் மேற்பட்டவை சேதமடைந்த நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த மின்கம்பங்களைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பங்களைச் சீரமைக்க அவா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.