விருதுநகர்

பட்டாசு ஆலை விபத்து: மேலும் 3 பேரின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

DIN

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 20 போ் உயிரிழந்தனா். இதில் 9 பேரின் சடலங்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகாக வைக்கபட்டிருந்தன.

இதில் ஆறு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 3 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுகிழமை 3 சடலங்களும் அடையாளம் காணப்பட்டன. சாத்தூா் பகுதியைச் சோ்ந்த மா.பூமாரி (55), ச.சங்கரேஸ்வரி (75), பொ.மல்லிகா ஆகியோா் என தெரிந்தது. 3 பேரின் சடலங்களும் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT