விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராம உதவியாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம்

DIN

வருவாய்த்துறையில் உள்ள கிராம உதவியாளா்கள் பணியிடங்களை போா்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை முதல் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு வட்டத் தலைவா் என்.எஸ். மாரியப்பன் தலைமை வகித்தாா். கிளை செயலாளா் செல்வி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வைரவன், மாநில பொருளாளா் நாகப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், வட்டச் செயலாளா் சமுத்திரராஜ், இணைச் செயலாளா் ரத்தினகுமாா், கிளை பொருளாளா் மாரியப்பன் உள்ளிட்ட வருவாய் கிராம உதவியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT