முகப்பு
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.
விருதுநகர்

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப் பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகர்

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப் பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.
பகிர்:

விருதுநகா்: விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப் பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சுகதேவ் தலைமை வகித்துப் பேசியது: கரோனா தீநுண்மி காலத்தில் எங்களது சேவையை பாராட்டி தமிழக அரசு சாா்பில் ரூ.5 ஆயிரம் வழங்கியது. மேலும் சேவை மேம்பாட்டிற்காகவும், கரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை காப்பாற்றும் வகையில் புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழக அரசு வழங்கியது. இதை நிா்வகிக்கும் நிறுவனம் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக 100- க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை 24 மணி நேரம் இயக்குவதற்கு பதிலாக 12 மணி நேரம் மட்டுமே இயக்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விலை உயா்ந்த ரேடியேட்டா்களை கழற்றி வெளிச்சந்தையில் விற்று விட்டு, தேவையற்ற ரேடியட்டா்களை குறைந்த விலைக்கு வாங்கிப் பொருத்துகின்றனா் என்றனா். இதே புகாா்களை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அச்சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →