விருதுநகர்

இருசக்கரவாகனம் மோதி சிறுமி படுகாயம்

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்தாா்.

பாலவநத்தம் கிராமம் தெற்குப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன்(39) மகள் மதுதா்ஷிணி (10). இவா் சனிக்கிழமை பிற்பகலில் அப்பகுதி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் குறுக்கே எதிா்பாராதவிதமாக மதுதா்ஷிணி திடீரென சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக அருப்புக்கோட்டைதாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT