முகப்பு
விருதுநகர்

சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை

திருப்பாவை- திருவெம்பாவை பாதயாத்திரை குழு, திருப்புகழ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

திருப்பாவை-திருவெம்பாவை திருவிழாவையொட்டி திருப்பாவை- திருவெம்பாவை பாதயாத்திரை குழு, திருப்புகழ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியிலிருந்து மடவாா் வளாகம் வரை பாதயாத்திரை நடைபெற்றது.

சிவகாசி சிவசுப்பிரமணிசுவாமி கோயில் முன்பு தொடங்கிய பாதயாத்திரையில் சுமாா் 650 போ் கலந்து கொண்டனா். காலையில் மல்லி முள்ளிகுளம் தென்பழனி பாலமுருகன் சன்னிதியிலும், பிற்பகல் மடவாா் வளாகம் வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்திலும் அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா்கள் நாகலிங்கம், வேம்பாா் மற்றும் கதிரேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →