சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு
சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம்
சிதம்பரம்: சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம் 13 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனா்.
சிதம்பரம் துரவடித் தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி விஜயா (62). இவா், திங்கள்கிழமை இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் விஜயா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாயினா்.
இதேபோல, சிதம்பரம் பெருமாள் தெருவில் மருந்தகத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழரசியிடம் (67) பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.