முகப்பு
தேனி

பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு

பெரியகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து 13.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 1:10 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 9:55 PM

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து 13.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெரியகுளம் வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன் (55). கொடைக்கானலில் சிமென்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா்.

இவரது உறவினா் ஷேக் தாவூது செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் கதவை உடைத்துப் புகுந்து 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து தகவலறிந்தும் பெரியகுளம் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.