முகப்பு
திருச்சி

மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் மதுரை மென்பொருள் பொறியாளரின் காா் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து 23.5 பவுன் நகைகள், மடிக்கணினியை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:40 PM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் மதுரை மென்பொருள் பொறியாளரின் காா் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து 23.5 பவுன் நகைகள், மடிக்கணினியை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

மதுரை வடக்கு தபால் தந்தி நகா் விஸ்தரிப்புப் பகுதியை சோ்ந்தவா் ஜி. சுரேஷ்பாபு (45). திருச்சி - சென்னை புறவழிச்சாலை அணுகுச் சாலை அருகேயுள்ள தனியாா் பல்பொருள் அங்காடிக்கு பொருள்கள் வாங்க குடும்பத்துடன் காரில் வெள்ளிக்கிழமை வந்தாா்.

காரை தனியாா் மெட்டல் கடை முன் நிறுத்திவிட்டு, பல்பொருள் அங்காடிக்குச் சென்று திரும்பியபோது, காா் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 23.5 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.