முகப்பு
விருதுநகர்

ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவராக கே.காளீஸ்வரி உள்ளாா். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் சந்திரனுக்கும், காளீஸ்வரிக்கும் முன்பகை உள்ளது. இதனால் சந்திரனின் மகன்கள் சத்தியராஜ், முத்துக்குமாா், சங்கா் மற்றும் உறவினா் நந்தீஸ்வரன் ஆகியோா் காளீஸ்வரி குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் பரப்பினாா்களாம்.

இதுகுறித்து 4 பேரிடம் காளீஸ்வரி கேட்டதற்கு, அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது குறித்து காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →