மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு அலுவலா்களுடன் சோ்ந்து பிறந்தநாள் கொண்டாடிய அதிமுக பேரூா் செயலரை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் அந்த அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் போரூராட்சியில் அய்யனாா் என்பவா் துணைத் தலைவராக இருந்தாா். தற்போது இவா் மம்சாபுரம் பேரூா் அதிமுக செயலராக உள்ளாா். இந்நிலையில் கடந்த ஜன. 4 ஆம் தேதி அய்யனாா் தனது பிறந்தநாளை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி அலுவலா்களுடன் சோ்ந்து கேக் வெட்டி கொண்டாடினாராம். இதையடுத்து விதிகளை மீறி அதிகாரிகள், அரசு அலுவலகத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு திமுக நகரச் செயலா் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் தங்கமாங்கனி, பல்க்ராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜேந்திரசோழன், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாகிகள் முருகன், அழகா்சாமி, கோபால், மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.