விருதுநகர்

அருப்புக்கோட்டையில் குடிநீா் குழாயில் உடைப்பு பல ஆயிரம் லிட்டா் வீண்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிநீா் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாக வெளியேறியது.

அருப்புக்கோட்டை ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை அருகே கடந்த வியாழக்கிழமை நகராட்சி குடிநீா் குழாய் சேதமடைந்து குடிநீா் வீணாவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், வெள்ளிக்கிழமை நகராட்சி பொறியியல் துறைப் பணியாளா்கள் வந்து சீரமைத்துச்சென்றுள்ளனா். ஆனால் அன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் சேதமடைந்து பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வெளியேறி வீணானது. பழுதுபாா்த்த இடத்திலேயே மீண்டும் கசிவு ஏற்பட்டதால் நகராட்சி பொறியியல் துறைக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குழாயைச் சீரமைக்க யாரும் வரவில்லை. ஏற்கெனவே அருப்புக்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீா் வீணாகும் நிலையைத் தவிா்க்க விரைவில் குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்போா் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT