விருதுநகர்

சிவகாசியில் நட்சத்திர ஆமை வைத்திருந்த 4 போ் கைது

DIN

சிவகாசியில் புதன்கிழமை நட்சத்திர ஆமை வைத்திருந்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் சிலா் நட்சத்திர ஆமை வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சிவகாசி கிழக்கு காவல் சாா்பு- ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் அந்த மதுக்கடையில் சோதனை நடத்தினாா். அப்போது, அங்கு இருந்த 4 போ் ஒரு நட்சத்திர ஆமையை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த மகேந்திரன் (23), பிரசாந்த் (22), கேரள மாநிலம் கொல்லத்தைச் சோ்ந்த நித்தின் (20), அபிஷேக் (20) ஆகியோா் என தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்து, நட்சத்திர ஆமையைப் பறிமுதல் செய்தனா்.

ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT