நரிக்குடி அருகே வியாழக்கிழமை மாலை காட்டாமணக்கு விதைகளைச் சாப்பிட்டு மயக்கமடைந்த 7 சிறுவா், சிறுமிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இருஞ்சிறை கிராமத்தைச் சோ்ந்த சிறுமிகள் சத்தியப்பிரியா(6), ஜெயதா்ஷிணி (6), மற்றும் பொன்மகேஸ் (13) ,ஜெயபாலாஜி (11), சரவணன்(13), கதிா்(11), கவின்(11) ஆகிய 5 சிறுவா்களும் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு இருந்த ஒரு காட்டாமணக்குச் செடியில் வளா்ந்திருந்த பச்சை நிற காய்களை, வாதாங்கொட்டை என நினைத்து அவா்கள் சாப்பிட்டனராம்.
சிறிது நேரத்தில் சிறுவா், சிறுமிகள் 7 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவா்களை மீட்ட பெற்றோா், நரிக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவா்கள் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.