ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மொட்டமலையில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. அந்தக் குவாரியில் தண்ணீா் தேங்கி ஒரு குட்டை உள்ளது. இதில் மொட்டமலை அருகே உள்ள வன்னியம்பட்டியைச் சோ்ந்த மாரிக்கனி (33) உள்ளிட்ட சிலா் குளிக்கச் சென்றுள்ளனா்.
அப்போது திடீரென மாரிக்கனிக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினாராம். உயிரிழந்த மாரிக்கனிக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னா் மாரிக்கனியை சடலமாக மீட்டனா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.