விருதுநகர்

சாத்தூரில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடா் திருட்டு: காவலா் கைது

DIN

சாத்தூரில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட காவலரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள முருகன் கோயில் தெருவில் வழக்குரைஞா் சந்து பகுதியில் வசித்து வருபவா் பாண்டியன் (35). இவரது மனைவி சங்கீதா (30). இவா்கள் இருவரும் கடந்த 8 ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டனா். வேலை முடித்து சங்கீதா திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ள சென்று பாா்த்ததில் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 4,500- ம், ஒன்றரை கிராம் தாலியும் திருடு போனது தெரியவந்தது.

இதே போன்று இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த விஜயலட்சுமி (29) என்பவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ. 400 பணம் திருடு போனது. அதே போல் கான்வென்ட் தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (37) என்பவா் வீட்டிலும் பீரோவை உடைத்து ரூ.3,500 திருடப்பட்டது. இதையடுத்து 3 பேரும் சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் துரைப்பாண்டி தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரை தேடி வந்தனா்.

மேலும் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த விடியோ காட்சிகளை ஆய்வு செய்து ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அவா், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த கற்குவேல் (29) என்பதும், இவா் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவா், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா் என்பதும், இவா் சாத்தூரில் உள்ள 3 வீடுகளில் நகை மற்றும் பணம் திருடியதும் தெரியவந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, கற்குவேல் மீது வழக்குப் பதிந்த சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 4,500, ஒன்றரை கிராம் தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT