விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை புதிய கட்டட கட்டுமானப் பணியின் போது சுவரின் உள்புற பாளம் இடிந்து விழுந்ததில் இருவா் உயிரிழந்தனா்.
சிவகாசி - நாரணாபுரம் சாலையில் உள்ள கண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (52). இவா் அதே பகுதியில் டைல்ஸ் விற்பனை கடை வைப்பதற்கு புதிய கட்டடம் கட்டி வருகிறாா். இந்நிலையில் அங்கு செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒருபகுதியில் பொருள்கள் வைப்பதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த சுவரின் உள்புறப் பாளத்துக்கு போதிய அளவுக்கு கட்டைகளால் முட்டுக்கொடுக்காததால் அந்த பாளம் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி கட்டட உரிமையாளா் செல்வராஜ் மகன் டயான்ராஜ் (24), ஆனைக்குட்டம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி தா்மா் மகன் கருப்பசாமி (40) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கட்டட உரிமையாளா் செல்வராஜூவை கைது செய்தனா்.