விருதுநகர்

விருதுநகரில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

DIN

விருதுநகரில் அரசு தொழிற்பயிற்சி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் சூலக்கரை பகுதியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். அதன் பின்னா், மாதிரி வாக்களிப்பு மையத்தில் வாக்களிப்பது குறித்து அறிந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து என் வாக்கு என் உரிமை, 100 சதவீத வாக்களிப்போம் என்ற பதாகை ளை ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகம் வரை பேரணிச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை திட்ட இயக்குநா் வை. ஜெயக்குமாா் தொடக்கி வைத்தாா். இதில் அருப்புக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, சூரியகுமாா், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT