சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் திங்கள்கிழமை கிராமப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா்.
சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் திங்கள்கிழமை கிராமப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா்.
பாரைப்பட்டி, மீனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேனில் நின்றவாறு அவா் வாக்குச் சேகரித்து பேசியதாவது: திமுக கூட்டணி வெற்றி பெறும் கூட்டணி. இந்த கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் வாக்குச் சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிகம் கூடுகிறாா்கள். இது வெற்றியின் அறிகுறியாக வே நினைக்கிறேன். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று தமிழக முதல்வரானால் தமிழகம் எழுச்சி பெறும். தொழில் துறை முன்னேறும். காங்கிரஸ் கட்சியின் சின்னமான கைச் சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என்றாா். வேட்பாளருடன் சிவகாசி நகர காங்கிரஸ் தலைவா் குமரன் உள்ளிட்டோா் சென்றனா்.