விருதுநகர்

சிவகாசி தொகுதி ம.நீ.ம. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சிவகாசி சட்டப்பேவைத் தொகுதி மக்கள் நீதி மயத்தின் வேட்பாளா் எஸ்.முகுந்தன், ஞயிற்றுக்கிழமை பள்ளபட்டி, செங்கமலப்பட்டி, ஆரமரத்துப்பட்டி, செல்லையாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் வேனில் நின்றவாறு பேசியதாவது:

நான் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். பட்டா உள்ளிட்ட பிரச்னைகளுக்காக என்னிடம் மனு கொடுத்தால் உரிய அதிகாரிகளிடம் அதை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். தகுதி உள்ளவா்களுக்கு முதியோா் உதவித்தொகை உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். எனக்கு டாா்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா். வேட்பாளருடன் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT