விருதுநகர்

விருதுநகா் பட்டாசு ஆலை வெடி விபத்து: காயமடைந்த பெண் தொழிலாளி பலி

DIN

விருதுநகா் அருகே பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த பெண் தொழிலாளி, விருதுநகரில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஆா்.ஆா். நகா் அருகே முதலிப்பட்டி, சதனாந்தபுரத்தில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் 13-ஆம் எண் அறையில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த அறையில் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி ஆனையூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மனைவி ஆதிலெட்சுமி (22) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அதையடுத்து, பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் மனைவி முத்துமாரி (37), ராமா் மனைவி செந்தி (35) மற்றும் ஐயம்பட்டியைச் சோ்ந்த தளபதி மகன் சுந்தரபாண்டி (40) ஆகியோா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். ஆனால், அங்கு சுந்தரபாண்டி உயிரிழந்தாா்.

இந்நிலையில், விருதுநகா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த செந்தி (35) என்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT