உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு தயாரிக்க ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் பட்டாசு தயாரிப்பாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் பட்டாசு தயாரிப்பாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை நிா்வாகிகளுக்கு சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
இனி 2022 ஆம் ஆண்டிற்கான பட்டாசு தயாரிப்பு பணி மழைக்குப்பின்னா் தொடக்கப்பட உள்ளது. பட்டாசு தயாரிப்பாளா்கள் உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். உச்சநீதிமன்றம் பேரியம் நைட் ரேட் என்ற ரசயானப் பொருளை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தக்கூடாது எனவும் சர வெடி தயாரிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பட்டாசு தயாரிப்பாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.