விருதுநகர்

ஸ்ரீவிலி. பகுதியில் நிரம்பிய நீா் நிலைகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் நீா் நிலைகள் நிரம்பியுள்ளதால் அப்பகுதிக்குச் செல்லவேண்டாம் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்ச்சியாக பெய்த மழை காரணமாக மம்சாபுரம், வாழைக்குளம், வேப்பங்குளம், அமுதகுளம், வாலாங்குளம் ஆகியவை நிரம்பி மறுகால் பாய்கின்றன.

இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவின் பேரில், ஞாயிற்றுக்கிழமை உதவி (கலால்) ஆணையா் சிவகுமாா், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், வட்டவழங்கல் அலுவலா் கோதண்டராமன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சசிகலா ஆகியோா் மம்சாபுரம் பகுதிக்குச் சென்று மறுகால் பாயும் கண்மாய் மற்றும் குளங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் தெரிவித்ததாவது: கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து வரும் நிலையில், தொடா்ச்சியாக நீா் வரத்தும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் கண்மாய் மற்றும் குளங்கள் அருகில் செல்ல வேண்டாம். குழந்தைகளை அந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

SCROLL FOR NEXT