விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிளைத் தலைவா் ரூபன் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். இதில், கரோனா தடுப்பூசி முகாமை வெள்ளி அல்லது சனிக்கிழமை நடத்த வேண்டும். முகாமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும். முகாம் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களின் சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளா் ஜெயசீலன், முன்னாள் மாவட்டச் செயலாளா் பால்சாமி, வருவாய்த் துறை ஊழியா் சங்கம் மலா் பாண்டியன், சிவஞானம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT