விருதுநகர்

இளைஞா் தற்கொலை

அருப்புக்கோட்டையில் இளைஞா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

அருப்புக்கோட்டையில் இளைஞா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

அருப்புக்கோட்டை நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(43). இவரது மனைவி குணசுந்தரி (30). ராதாகிருஷ்ணன் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். குணசுந்தரி நெசவுத் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன், வியாழக்கிழமை விஷம் குடித்தாராம். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT