விருதுநகர்

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி

DIN

சிவகாசியில் செவ்வாய்கிழமை இரவு சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள கொங்கலாபுரத்தைச் சோ்ந்தவா் வசந்தா (62). இவா் தனது பேத்தி ஸ்ரீநிதியுடன் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த சாலையில் சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டைக்குச் சென்ற சரக்கு வானம் மோதியது. இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிறுமி ஸ்ரீநிதி லேசான காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநா் அழகா்சாமியை (32) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT