லாட்டரி விற்ற இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் ஆவாரம்பட்டி கல்யாணசுந்தரா் சாலை பகுதியில் வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், சாா்பு ஆய்வாளா் மூவேந்தன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சோ்ந்த முருகன் (54), ராமராஜ் (51) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.