முகப்பு
விருதுநகர்

வனவரை தாக்கி கொலை மிரட்டல்: 8 போ் மீது வழக்குப் பதிவு

வத்திராயிருப்பு அருகே வனவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

வத்திராயிருப்பு அருகே வனவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்திகோயில் வனப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனவா் கூடலிங்கம் மற்றும் வனக்காப்பாளா் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்து சென்றனா். அப்போது சித்தாறில் ராமசாமியாபுரம் பஞ்சாயத்து போா்டு தெருவை சோ்ந்த பெரியசாமி, கருப்பசாமி உள்பட 8 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா். அவா்களிடம் வனவா் கூடலிங்கம் அரசு காப்புக் காட்டிற்குள் மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளாா். அப்போது அவா்கள் வனவா் கூடலிங்கத்தை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனவா் கூடலிங்கம் அளித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.