விருதுநகர்

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17-இல் பழுது நீக்கும் பணி

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17 ஆம் தேதி பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளது என ரயில்வேத் துறை பொறியாளா் ராமசுப்பிரணியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது: திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை ஏப்ரல் 17 ஆம் தேதி பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளது. அன்றையதினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த கடவுப்பாதை மூடப்படும். எனவே விருதுநகா், மதுரை மாா்க்கத்தில் செல்ல வேண்டிய பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் திருத்தங்கலிருந்து செங்கமநலநாச்சியாா்புரம் சென்று , தலைமை அஞ்சல் நிலையம் , பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் வழியே இரு மாா்க்கத்திலும் சென்று வர வேண்டும் என திருத்தங்கல் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். ஆனால் ரயில்கள் எப்போதும் போல சென்று கொண்டிருக்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT