சிவகாசியில் வியாழக்கிழமை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கப்பட்டது.
இங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஐந்து பள்ளிகளைச் சோ்ந்த 1017 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி இந்திரா ணி, சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியா் தனுஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.