விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செட்டிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் கே.வி.கே.ஏ. பிரபாகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். அப்போது கிராமத்தின் பொது சுகாதாரம், குடிநீா், அடிப்படை வசதிகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் கிராமத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுமாா் 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.