ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேத்தூா் ஊரக போலீஸாா், கணபதிசுந்தரநாச்சியாா்புரம் தாமிரவருணி நீரேற்று நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் இசக்கிமுத்து (24) எனத் தெரிந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.