விருதுநகர்

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

DIN

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு கடை அருகே தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரித்த தந்தை, மகன் உள்பட 3 போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே சீனிவாசாநகா் பகுதியில் ஒரு பட்டாசுக் கடை அருகே தகர கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் ஒரு பட்டாசு கடை அருகே தகர கொட்டகையில் 3 போ் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் அம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (31), சரவணன் (26), இவரது தந்தை மாரியப்பன் (59) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து பேன்சி ரக பட்டாசுகள் 13 பெட்டிகள் மற்றும் கரித்தூசி உள்ளிட்ட மூலப்பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT