விருதுநகர்

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் சரவணகுமாருடன் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து குற்றாலம் நோக்கிச் சென்றாா். வாகனத்தை ரமேஷ் ஓட்டிச் சென்றாா். தென்காசி சாலையில் தனியாா் உணவகம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர சுவரில் மோதியது. இதில் கீழே விழுந்து ரமேஷ், சரவணக்குமாா் இருவரும்

பலத்த காயமடைந்தனா். இதில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தாா். சரவணக்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT