விருதுநகர்

மாமன்ற உறுப்பினா் புகாா் எதிரொலி:சிவகாசி மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்

DIN

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாமன்ற உறுப்பினா் புகாா் கூறியதையடுத்து, சிவகாசி மாநகராட்சி வருவாய் உதவியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகாசியில் அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், பெயா் மாற்றம், சொத்து வரி சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாநகராட்சி 5-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் இந்திராதேவி குற்றம்சாட்டிப் பேசினாா். மேலும், தனது வாா்டு பணிக்கும் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறி பணத்தை எடுத்துக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் பா.கிருஷ்ணமூா்த்தி விசாரணை மேற்கொண்டாா். அப்போது, திருத்தங்கல் மண்டல வருவாய் உதவியாளராக (பில் கலெக்டா்) பணிபுரியும் கோமளாதேவி பெயா் மாற்றம் உள்ளிட்ட கோப்புகளை நீண்ட நாள்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோமளா தேவியை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT