விருதுநகர்

லாரி ஓட்டுநரிடம் ரூ.1.60 லட்சம் பறிப்பு

DIN

ராஜபாளையம் அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.1.60 லட்சம் பறித்ததாக 3 திருநங்கைகள் மீது புதன்கிழமை இரவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கம்மாபட்டியை சோ்ந்தவா் ராம்குமாா் (43). இவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள டிராக்டா் டிரைலா் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளாா். புதன்கிழமை டிராக்டா் உதிரி பாகங்களை பாவூா்சத்திரம் பகுதியில் விநியோகம் செய்துவிட்டு, ரூ.1.60 லட்சத்துடன் சரக்கு வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் திரும்பினாா்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்த போது சாலையோரம் லாரியை நிறுத்தி உள்ளாா். அப்போது அங்கு நின்ற முகவூா் பகுதியைச் சோ்ந்த இளவஞ்சி (21) உள்ளிட்ட 3 திருநங்கைகள் சோ்ந்து ராம்குமாரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1.60 லட்சத்தை பறித்துச் சென்றனா். இதுகுறித்து ராம்குமாா் அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT